ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாகத்திற்கு எதிராக சுவரொட்டிகள்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாகத்திற்கு எதிராகக் கொழும்பில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறும் போது இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்படுவது வழமையாகும்.

குறித்த சுவரொட்டிகளில் சில எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததுடன் அதில் கிரிக்கெட் பாதுகாப்பிற்கான தேசிய அமைப்பு எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் மற்றும் லங்கா ப்ரீமியர் லீக் உடன் தொடர்புபட்ட சூதாடிகளுக்கு எதிராகச் சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த சுவரொட்டிகளில் கோரப்பட்டுள்ளது.