யாழில் சிறுமி கை அகற்றப்பட்ட விவகாரம் குற்றம் சுமத்தும் இராமநாதன் அர்ச்சுனா

யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் பொறுப்பற்ற நடவடிக்கைகள் அனைத்தையும் வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி கண்டுகொள்வதில்லை என இராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட மல்லாகம் பகுதியை சேர்ந்த சிறுமி வைசாலியின் கை அகற்றடப்பட்டமை தொடர்பில் வைத்தியர் சத்தியமூர்த்தி பாராமுகமாக செயற்பட்டுள்ளதாகவும் வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்து நீதிமன்றை நாடுவதற்கு முன்னர் அதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்றும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.