யானை தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு!

மஹியங்கனையில் காட்டு யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மஹியங்கனை, பெலிகல்ல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த இளைஞரை மஹியங்கனை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போது இடைநடுவில் உயிரிழந்ததாக பொலிஸார் கூறியுள்ளார்.

சடலம் மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மஹியங்கனைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.