வவுனியாவில் வீதியால் சென்ற பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி!

வவுனியா வீதியால் சென்ற பெண்ணொருவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் வவுனியா, கோயில் குளம் பகுதியில் இன்றையதினம் (28-06-2024) இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கோவில் குளம் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற இருவர் அவரது சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்

இதன்போது ஒரு பவுண் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்