ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தலைவர் யாரும் இல்லை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தற்போது சட்டரீதியாக தலைவர் ஒருவர் இல்லை என கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் மனிதநேய மக்கள் கூட்டணியின் தலைவருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நிமல் சிறிபால டி சில்வா சட்டத்துக்கு முரணாக நியமிக்கப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்டு மேலும் தெரிவித்த அவர்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியில், கட்சியின் புதிய தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், துமிந்த திஸாநாயக்க கட்சியின் பொதுச்செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

இது தொடர்பான அறிவிப்பு கட்சியின் செயற்குழுவால் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், குறித்த இருவரினதும் நியமனம் சட்டவிரோதமானது.

சுதந்திக் கட்சியில் உள்ள ஏனைய உறுப்பினர்கள் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்க கூடாது என தெரிவித்தார்.