கிளிநொச்சியில் ஜஸ்கிறிம்க்கு முண்டியடிக்கும் மக்கள்!

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று நாடாளாவிய ரீதியில் உணவு உள்ளிட்ட பல்வேறு தன்சல்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் கிளிநொச்சியின்   சந்திர பூங்காவிற்கு அருகில் பொசன் போயாவை முன்னிட்டு இன்று ஜஸ்கிறிம் தன்சல் வழங்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 18,207 தான சாலைகள்

இதன்போது பெருமளவிலான மக்கள் அணி திரண்டு வந்து ஜஸ்கிறீமிற்காக மிக நீண்ட வரிசையில் காத்துகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 18,207 தான சாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

பொசன் தான சாலைகளை பரிசோதனைக்குட்படுத்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காரியாலயம் தெரிவித்துள்ளது.