இலங்கையில் புதிய அரசியல் இயக்கம்!

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக கொண்டு அரகலய போராட்ட குழுவினர் இணைந்து, மக்கள் போராட்ட முன்னணி என்ற புதிய அரசியல் இயக்கத்தினை நேற்றையதினம் (19) ஆரம்பித்துள்ளனர்.

பல்கலைக்கழக பழைய மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கி மக்கள் போராட்ட முன்னணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அரசியல் இயக்கத்தில், அரகலய செயற்பாட்டாளர் லகிரு வீரசேகர அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியங்களிற்கு இடையிலான முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, முன்னணி சோசலிச கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சட்டத்தரணி நுவான்போபகே, ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர மற்றும் இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர்.