மோசடியில் ஈடுபட்ட பெண்ணை வலைவீசி பிடித்த பொலிசார்!

கம்பஹா, ஜா – எல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போலி நாணயத்தாள் மற்றும் போலி ஆவணங்களுடன் பெண் ஒருவர் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா, ஜா – எல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். களனி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 5,000 ரூபா போலி நாணயத்தாள், 11 இறப்பர் முத்திரைகள் , போலி தேசிய அடையாள அட்டைகள் , போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் போலி கடவுச்சீட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதான பெண் ஜா – எல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.