நாட்டு மக்களுக்கு சர்வதேச நாணயநிதியத்தின் மகிழ்ச்சியான செய்தி!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபையானது, விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் இலங்கையின் இரண்டாவது மீளாய்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இது நாட்டிற்கு மூன்றாவது தவணையாக சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற வழி வகுத்துள்ளது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அலி சப்ரி தனது X கணக்கில் குறிப்பொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.