தடம் புரண்ட புகையிரதம்!

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் தடம் புரண்டதால் புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று (28) காலை கொம்பனி வீதி புகையிரத நிலையத்தில் தடம் புரண்ட புகையிரதம், புகையிரத தளத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது மருதானை புகையிரத நிலையத்திற்கு அருகில் மீண்டும் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.