யாழ் வடமராச்சி பகுதியில் கிணற்றில் இருந்து மீட்க்கப்பட்ட மர்ம பொருள்!

யாழ். வடமராட்சி – பருத்தித்துறை கொட்டடி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பாவனையில்லாத கிணற்றிலிருந்து பாரியளவிலான கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை கொட்டி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பற்றைக் காணியில் இன்று சனிக்கிழமை துப்பரவு செய்யப்பட்டும்போது அக் காணிக்குள் இருந்த பாவனையில்லாத கிணறு துப்பரவாக்கும் போது 11 கைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு குண்டு செயலிழக்கும் குழுவினரால் மீட்கப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.