மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலத்தின் அதிபர் 15 வயது  மாணவி ஒருவரை பாலியல் சேட்டைக்கு  தூண்டிய சம்பவம் தொடர்பாக அப்பாடசாலையின் அதிபர்  ஹட்டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (25) மாலை இவர் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலையின் மாணவி ஒருவர் அதிபருக்கு வட்ஸ்எப்  ஊடாக அனுப்பிய கடிதத்திற்கு, குறித்த அதிபர் அந்த மாணவியை தரம் 04 க்கான கலந்துரையாடல் நிறைவடைந்த பின்னர் கடைக்கு போவதாக கூறி i.c.t.நிலையத்திற்கு வருமாறு அந்த மாணவிக்கு பதில் அனுப்பியுள்ளமை தெரிய வந்ததால், நேற்றைய தினம் பெற்றோர்கள் ஒன்று கூடி பாடசாலை அதிபரை கைது செய்யுமாறும் பாடசாலையை விட்டு வெளியேறுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதேவேளை குறித்த மாணவி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

இதேவேளை, கைது செய்யப்பட்ட அதிபர் இன்று (26) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.