திடீரென சுகயீனமுற்ற மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

இரத்தினபுரி பலாங்கொடையில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 22 மாணவிகள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,சுகயீனமுற்ற மாணவிகள் இன்றைய தினம் காலை இரசாயன பொருட்கள் சிலவற்றை பயன்படுத்தி பாடசாலையின் கழிவறையை சுத்தம் செய்துள்ளனர்.

பின்னர், சிறிது நேரம் கழித்து இந்த மாணவிகள் அனைவரும் திடீரென சுகயீனமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, சுகயீனமுற்ற மாணவிகள் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.