மது போதையில் நீராடச் சென்ற இருவருக்கு நிகழ்ந்த சோகம்!

மது போதையில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஹட்டகஸ்திகிலிய, இஹல கங்ஹிடிகம வாவி நேற்று (20) உயிரிழந்தவர்கள் 24 மற்றும் 34 வயதுடைய பொல்கஹவெல மற்றும் பூஜாபிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் வேறு இருவருடன் மது அருந்திவிட்டு நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலங்கள் , கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.