இறைச்சிக்கு மாடுகளை திருடிய மூவர் கைது!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் இறைச்சிக்காக பொதுமக்களின் மாடுகளை திருடிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்றையதினம் (20-10-2024) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நீண்ட நாட்களாக பொதுமக்களின் மாடுகளை திருடி இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மூன்று பேரை சந்தேகத்தின் பெயரில் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.