யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி!

யாழ்பபாண போதனா வைத்தியசாலையால் சிங்கள பெண்மணி ஒருவர் தனது கண்பார்வையை மீண்டும் பெற்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சிங்கள பெண் தனது கண்பார்வையை இழந்திருந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண்புரை அறுவைச் சிகிச்சை மூலம் மீளவும் பார்வையை பெற்றுள்ளார்.

ஏற்கனவே ஒரு கண்ணில் இவருக்கு பார்வை பறிபோய் 2 ஆண்டுகளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், 2 அவது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை யாழப்பாண போதனை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு அவர் தனது பார்வையை பெற்றுள்ளார்.

தனக்கு பார்வை கிடைத்ததை இட்டு குறித்த பெண் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.