பூசா சிறைச்சாலையில் விசேட சோதனை!

பூசா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, சிறை கூண்டினுள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 04 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் , 01 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தொலைபேசியின் துணை பாகங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.