எரிபொருள் விலை குறைப்பால் ஏற்பட்டுள்ள சிக்கல்!

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு வரி வருமானம் அதிகரிக்கப்பட வேண்டுமென பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

“இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு வரி வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வரிகள் நீக்கப்பட்டு எரிபொருள் விலை குறைக்கப்பட்டால் அதன் பலன் பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதிக எரிபொருளை பெற்றுக்கொள்வது ஏழை மக்கள் அல்ல என்றும், ஏழை மக்கள் சில மறைமுக நன்மைகளைப் பெறலாம். ஆனால், பணக்காரர்களுக்கு அதிக நன்மை உண்டு என்றும் கூறியுள்ளார்.