பழங்கால பொருட்களுடன் இருவர் கைது

பழங்கால அகழ்வாராய்ச்சியில் இருந்து மீட்கப்பட்ட விலைமதிப்பற்ற மாணிக்கக்கற்கள் மற்றும் அரிய சிலைகள் உள்ளிட்ட மேலும் சில பொருட்களை ஒன்றை வைத்திருந்த இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பசறை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பரமன்கட பிரதேசத்தில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் கேகாலை ஹெட்டிமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 26 வயது மற்றும் 63 வயதுடையவர்கள் என பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.