இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக அநுர மத்தேகொட

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக அநுர மத்தேகொடவும், பிரதித் தலைவராக ராசிக் சரூக்கும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இதனை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சத்துர கல்ஹேன தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கௌசல்ய நவரத்ன மற்றும் முன்னாள் பிரதித் தலைவர் நலிந்த இந்ததிஸ்ஸ ஆகியோர் பதவி விலகியதனால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக செயலாளர் சத்துர கல்ஹேன மேலம் தெரிவித்துள்ளார்.