புதிய ஜனாதிபதிக்கு சஜித் அளித்த வாக்குறுதி!

புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) தேவைப்படும் போதேல்லாம் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

உத்தியோகப்பூர்வமாக அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இலங்கையை தற்போதைய நெருக்கடியில் இருந்து மீட்பது வெற்றி பெற்றவரின் கடமை மட்டுமல்ல என தெரிவித்த சஜித், அது அனைவருதும் கடமை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவித்ததாவது, “2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய அநுர குமார திஸாநாயக்கவை நான் வாழ்த்துகிறேன்.

தேசத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் அவருக்கு பலம் இருப்பதாக நான் நம்புகிறேன்,” என தெரிவித்துள்ளார்.