106 வயதிலும் தனது வாக்கினை பதிவு செய்த முதியவர்!

2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் 106 வயது நபர் ஒருவர் தனது வாக்கினை பதிவு செய்துள்ளமை பலரின் கவனத்தை பெற்றுள்ளது.

திருகோணமலையின் மூத்த பிரஜையான ஜோன் பிலிப் லூயிஸ் (106) ஒன்பது தடவையாக இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தல தனது வாக்கினை பதிவு செய்ததாக அவர் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர் ,
நல்லதோர் ஆட்சியாளர் வரவேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு எனவும் அத்துடன் இறைவனது ஆசியுடன் எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தலிலும் வாக்களிக்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.