வீட்டுக்குள் நுழைந்து அச்சுறுத்தி பணம் கொள்ளை- 4 பொலிஸ் அலுவலர் கைது!

கொழும்பு, முகத்துவாரம் பகுதியில் உள்ள வீடொன்றில் நுழைந்து வீட்டில் வசித்தவர்களை அச்சுறுத்தி பெருமளவான பணம் பெற்ற குற்றச்சாட்டில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோதர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புளூமெண்டல் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் மற்றும் சார்ஜன்ட் ஒருவரும், கொழும்பு வடக்கு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் இவ்வாறு மோதர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.