அனுரவுக்கு அதிகரிக்கும் ஆதரவு!

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜனோபர் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திசாநாயகவுக்கு (Anura Kumara Dissanayake) ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சிக்கு ஆதரவு மக்களும் ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

முல்லைத்தீவு முள்ளியவளை (Mulliyawalai) பகுதியில் நேற்று (17) இரவு முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜனோபர் தலைமையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அநுர குமார திசாநாயகவிற்கு ஆதரவளிக்கும் பரப்புரை கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

இதன்போதே அவர் தமது ஆதரவை தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனத்தி (sunil handunneththi) உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டு அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு ஆதரவளிக்கும் ஆறு கோரிக்கை விடுத்தனர்.