மேலாடைகளின்றி  திருமண மண்டபத்துக்குள் போதை விருந்து!  

கம்பஹா, கடவத்தைவில் திருமண மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தொன்றை அதிகாரிகள் சுற்றிவளைத்து சோதனையிட்டபோது பலர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் சுமார் 200  ற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் பங்கேற்றிருந்ததுடன், அவர்களில் சிலர் ஒழுக்கக்கேடாக மேலாடையின்றி இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.