தடம் புரண்ட ரயில்!

மஹவ சந்தியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த விரைவு ரயில் ராகம புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக பிரதான ரயில் பாதையில் செல்லும் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ராகம ஊடாக செல்லும் அனைத்து ரயில்களும் காலதாமதமாக இயங்குவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.