சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் அதிகரிப்பு!

அநுராதபுரம் மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து வருவது குறித்து அநுராதபுரம் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 491 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், மேலும் பல சம்பவங்கள் பதிவாகாமல் இருக்கலாம் எனவும் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரி மகேந்திர தசநாயக்க தெரிவித்துள்ளார்.