மகிந்தானந்தவிடம் சவால் விட்ட மனோ கணேசன்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச(sajith premadasa) ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்(mano ganeshan) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக நாவலப்பிட்டியில் நேற்று(11) பிற்பகல் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு உரையாற்றிய மனோ கணேசன்,

முடிந்தால் சிலிண்டரை கொண்டுவந்து நாவலப்பிட்டி நகரில் வியாபாரம் செய்யுமாறு மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு(mahindananda aluthgamage) சவால் விடுப்பதாக தெரிவித்தார்.அதனை மகிந்தானந்த அளுத்கமகேவால் செய்ய முடியாது என மனோ கணேசன் குறிப்பிட்டார்.

தோட்டத் தொழிலாளரை ஏமாற்றிய ரணில்
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக வழங்குவதாக உறுதியளித்ததாகவும், அது தற்போது 1350 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.