கோர விபத்தில் சிக்கிய பெண் மரணம்!

பாதுக்கை லியான்வல வீதியில் துத்திரிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டிக்கு பின்னால் பஸ் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதியும் பின் இருக்கையில் பயணித்த பெண் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில், பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பின் இருக்கையில் பயணித்த பெண் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

பாதுக்கை பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பேருந்தின் சாரதியும் காயமடைந்து பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.