மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் விண்கல்!

தற்போது பூமியை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் பெரிய விண்கல் ஒன்றுக்கு எகிப்திய நாகரிகத்தில் அழிவின் கடவுளுக்கு [God of வழங்கப்பட்டுள்ள அபோபிஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த விண்கல் மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

கடந்த 2002 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்கல் ஆனது வரும் 2029 ஆம் ஆண்டு மே 13 ஆம் திகதி பூமியைத் தாக்கும் என்று அஞ்சப்படுகிறது. 

இந்த விண்கல்லை Space Objects Tracking and Analysis (NETRA) உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இந்த அச்சறுத்தலில் இருந்து தப்பிக்க இந்தியா அனைத்து அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

தற்போது பூமிக்கு 32,000 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இந்த விண்கல் அளவுக்கு பெரியதாக இதுவரை வேறு எந்த விண்கல்லும் பூமிக்கு மிக அருகில் வந்ததில்லை என்று அவர் தெரிவித்தார்.குஜராத்தின் அகமதாபாத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைத்தனத்தை விட இந்த விண்கல் பெரியது என்று கூறப்படுகிறது.

சுமார் 350 முதல் 450 மீட்டர்கள் வரை இதன் விட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 2029 இல் பூமிக்கு மிக அருகில் வரும் இந்த விண்கல் பூமி மீது மோதும் பட்சத்தில் பேரழிவு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.