தமிழ் பகுதி காணி ஒன்றிலிருந்து மர்ம பொருள் மீட்பு!

வவுனியாவில் உள்ள காணி ஒன்றிலிருந்து மோட்டர் குண்டு ஒன்று நேற்று (10-09-2024) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வெற்றுக் காணியை உரிமையாளர் துப்பரவு செய்த போது அங்கு சந்தேகத்திற்கிடமான வெடி பொருள் இருப்பதை அவதானித்துள்ளார்.

இதையடுத்து, காணி உரிமையாளர் வவுனியா பொலிஸாருக்கு அறிவித்தையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், அது மோட்டர் குண்டு என உறுதிப்படுத்தினர்.

குறித்த குண்டை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அகற்றுவதற்கான நடவடிக்கையை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.