கிளிநொச்சியில் தபால் ஊழியருக்கு இடையூறு விளைவித்த நபர் ஒருவர் கைது!

கிளிநொச்சியில் வாக்காளர் அட்டை விநியோகிக்க சென்ற தபால் ஊழியருக்கு இடையூறு விளைவித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்தபுரம் பகுதியில் இன்று (10) காலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஊழியரை மறித்து தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்ட குறித்த சந்தேகநபர், வாக்காளர் அட்டைகளையும் பறிக்க முற்பட்டுள்ளார்.இந்நிலையில், வாக்காளர் அட்டைகளை தீ மூட்டுவேன் எனவும், குறித்த ஊழியரை அச்சுறுத்தும் வகையிலும் அச்சந்தேகநபர் முயன்றுள்ளார்.