விடுமுறையில் வெளிநாடு சென்று திரும்பாத அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு!

விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற அரச ஊழியர்கள், உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்காவிட்டால் சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி வெளிநாட்டு விடுமுறை காலத்தை நீடிக்க வேண்டுமாயின் முதலாவது விடுமுறை காலம் நிறைவடைவதற்கு முன்னர் அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டுமென அரச நிறுவன பிரதானிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை விடுமுறை காலத்தை நீடித்துக்கொள்ளும் அனுமதியை ஏற்கனவே பெறப்பட்ட விடுமுறை காலப்பகுதிக்குள் தீர்க்கப்படாவிட்டால் உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்க வேண்டியது கட்டாயமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.