தேர்தல் கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பல்வேறு தரப்பினர் மேற்கொண்டுள்ள கருத்துக்கணிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு, வாக்காளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் தமது கருத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.