வரிவசூலிக்கும் மோசடிக் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை!

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் மோசடி குழு தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுகப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் வரி வசூலித்து வருகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.கொழும்பு, பாணந்துறை, நீர்கொழும்பு, வென்னம்புவ மற்றும் மினுவாங்கொடை ஆகிய பகுதிகளிலிருந்தே இவ்வாறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.எனவே வரி செலுத்துவோர் , மோசடியாளர்கள் தொடர்பில் காவல்துறையினரிடம் புகார் செய்யுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.