கிளப்வசந்த கொலை வழக்கில் மற்றுமோர் நபர் கைது!

கிளப் வசந்த கொலையின் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரான பட்டி ஆரம்பகே என்ற அஜித் ரோஹன நேற்று (23) தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கவுடான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கதிர்காமத்திற்குத் தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் 29 வயதான தாருகா வருண இந்திக்க டி சில்வாவும் அதுருகிரியவில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.கடந்த ஜூலை 08ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறப்பதற்காக வந்த போது இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.