முச்சக்கரவண்டி விபத்தில் நால்வர் வைத்தியசாலையில்!

மாத்தறை – கதிர்காமம் வீதியில் தங்காலை, உனாகுருவ பிரதேசத்தில் பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும், ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை, வாடினாகலை பிரதேசத்தில் இருந்து தென் மாகாணத்தில் சுற்றுலா செல்வதற்காக முன்பள்ளி பிள்ளைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணம் செய்த தாய், தந்தை, மகன் மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதி ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் ஆபத்தான நிலையில் இருந்த தாய் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.