பல்கலைகழக மாணவனின் விபரீத முடிவால் கலங்கும் குடும்பம்!

  பேராதனை பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பம் கற்கும் வயம்ப பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கம்பஹா ஹப்புகொட பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய மாணவரே கண்டி ரியகமவில் உள்ள விடுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சமூகத்தை புரிந்து கொள்ள முடியாமல் மிகுந்த ஏமாற்றம்

உயிரிழந்த மாணவர் மூன்று நாட்களாக தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மடிக்கணினியில் குறிப்பையும் வைத்துள்ளதாக தெரிவருகின்றது. உயிரிழந்த மாணவன் மேலும் மூன்று மாணவர்களுடன் விடுதியில் தங்கியிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மூன்று மாணவர்களும் ஆறு மாத பயிற்சி நெறிக்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த மாணவன்,  வாழ்க்கை என்ற வினோதமான திரைப்படத்தை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும், சமூகத்தை புரிந்து கொள்ள முடியாமல் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும் அவர் விட்டுச்சென்ற குறிப்பில் தெரிவித்துள்ளார்.