லொறி – பஸ்மோதி கோர விபத்து!

திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியில் லொறி – பஸ் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று (21) காலை இடம்பெற்றுள்ளது.

சிறிய ரக லொறி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. லொறியின் சாரதி உறங்கியதால் விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்தின் போது, லொறியின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.