பாடசாலை ஆசிரியரின் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட இருவர் கைது!

பாடசாலை ஆசிரியை ஒருவரின் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலதிக விசாரணை
குறித்த ஆசிரியை தனது குழந்தையுடன் ஹட்டன் நகரில் பயணித்துக் கொண்டிருந்த போது ஹட்டன் தொடருந்து நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இதனையடுத்து சம்பவம் தொடர்பில் ஹட்டன் காவல்நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.