தபால் மூல வாக்களிப்பில் 24268 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பம் செய்த 24268 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

எதிர்ரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 736589 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதில் 712321 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4, 5 மற்றும் 6ம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரசாங்க உத்தியோகத்தர்கள் இவ்வாறு தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பம் செய்துள்ளனர்.

விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்யாமை உள்ளிட்ட சில காரணிகளினால் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.