ரொறன்ரோவில் துப்பாக்கியுடன் கைதான சிறுவன்!

கனடாவின் ரொறன்ரோவில் தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரொறன்ரோவின் நோர்த் யோர்க் பிராந்தியத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 17 வயதான சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சிறுவனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரிடமிருந்து ஒரு துப்பாக்கியும் பெரும் எண்ணிக்கையிலான துப்பாக்கி தோட்டாக்களும் வைக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோதமான முறையில் ஆயுதம் வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குறித்த சிறுவனுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.