கிளப்வசந்த கொலை சந்தேக நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

  கிளப் வசந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 11 சந்தேக நபர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பலத்த பாதுகாப்புடன் சந்தேக நபர்கள் கடுவலை நீதவான் நீதிமன்றில் இன்று (20) ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம் 08ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழாவின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த உட்பட இருவர் உயிரிழந்தனர்.மேலும் இந்த சம்பவத்தில் பிரபல பாடகியான கே. சுஜீவா உட்பட 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.