தேர்தலில் எவருக்கும் ஆதரவு இல்லை!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவருக்கும் ஆதரவளிக்க தாம் தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

விசேட ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

அதேபோல், சில ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் தான் தொடர்பில் தெரிவிக்கும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.