பாகிஸ்தானில் குரங்கம்மை கண்டறிவு!

பாகிஸ்தானில் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை இன்று (16) தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வந்த நபர்களிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது என்று பாகிஸ்தான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

வைரஸின் புதிய மாறுபட்ட திரிபு காணப்பட்டதை அடுத்து, உலக சுகாதார அமைப்பு இந்த நோயின் சமீபத்திய பரவலை அவசரநிலையாக அறிவித்துள்ளது.