நாட்டில் சில மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு!

நாட்டில் சில வகை மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தட்டுப்பாடு நிலவும் சில வகை மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜீ.வீரசூரிய தெரிவித்துள்ளார்.

மயக்க மருந்து வகை தட்டுப்பாடு
சத்தர சிகிச்சைகளின் போது பயன்படுத்தப்படும் நியோஸ்டிக்மிக் என்ற மயக்க மருந்து வகை தட்டுப்பாடாக காணப்பட்டதாகவும் தற்பொழுது அவை இறக்குமதி செய்பய்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் மாதங்களில் தேவைக்கு ஏற்ற வகையில் மருந்துப் பொருட்கள் கிடைக்கப்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.