சம்பளத்துடன் பெண் ஊழியர்களுக்கு விடுமுறை!

 இந்தியா – ஒடிசா அரசு, மாநில அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் மாதவிடாய் விடுமுறையை வழங்கவுள்ளதாக மாநில துணை முதல்வர் பிராவதி பரிடா அறிவித்தார்.

அரசாங்க பெண் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களும், மாதவிடாய் நாள்களில் முதல் அல்லது 2வது நாளில் இந்த விடுமுறையை விருப்பத்தின் பேரில் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பெண்களின் உடல் ஆரோக்கியத்துக்கு இந்தத் திட்டம் சிறப்பானதாக இருக்கும் என்று துணை முதல்வர் பிராவதி தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்தியாவில் தற்போது கேரளா மற்றும் பீகார் மாநிலங்களில் மட்டும்தான் மாதவிடாய் விடுமுறை வழங்கப்படும் நிலையில் தற்போது ஒடிசாவிலும் மாதவிடாய் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.