பொன்சேகாவுக்கு “விளக்கு சின்னம்”

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் “விளக்கு” ​​சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஜனாதிபதி ரணிலுக்கு எரிவாயு சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 21 ஆம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க உட்பட 39 வேட்பாளர்கள் இந்த ஆண்டு போட்டியிட தகுதி பெற்றுள்ளனர்.