கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!

நாடளாவியரீதியில் உள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் 2 ஆம் தவணை பாடசாலை விடுமுறை மற்றும் 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக கல்வியமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி ” 2024 ஆம் ஆண்டுக்கான தமிழ், சிங்கள மொழி அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணை தனியார் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (16) வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் ஓகஸ்ட் (26) திகதி பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.