யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்துள்ள வேண்டுகோள்!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பெண்ணொருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், குறித்த பெண்ணின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா அறிவித்துள்ளார்.

சுயநினைவற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் தொடர்பான எந்தவிதமான தகவல்களும் இல்லாததால், அவரது சடலம் யாழ் . போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

எனவே சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பிரதி பணிப்பாளர் கோரியுள்ளார்.